நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் அஜித்குமார் இரண்டாவது மகன் ஆவார். மற்ற இரண்டு மகன்களின் பெயர் அனில் குமார், அனுப் குமார். இவர்களில் ஒருவர் தொழிலதிபராகவும், மற்றொருவர் ஐஐடி மெட்ராஸில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் தாயார் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழக்க தந்தை சுப்ரமணியம் உயிரோடு இருந்தார். அவர் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் இவ்வளவு நாள்கள் வசித்துவந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்தார் சுப்ரமணியம். இந்தச் சூழலில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை இழந்திருக்கும் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துவருகின்றனர்.