‘சில நொடிகளில்’ படத்தில் நானும் யாஷிகாவும் இணைந்து நடிக்கிறோம்: ரிச்சர்ட் ரிஷி

‘சில நொடிகளில்’ படத்தில் நானும் யாஷிகாவும் இணைந்து நடிக்கிறோம். இந்தப்படங்களின் புகைப்படங்களை தான் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தேன் என்று விளக்கமளித்துள்ளார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பின் இவர் சினிமாவை விட்டு விலகினர். ஷாலினிக்கு ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். இந்நிலையில் ரிச்சர்ட் ரிஷி நடிகை ஒருவரை காதலிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் ரிச்சர்ட் ரிஷி. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘திரெளபதி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதனையடுத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்திலும் நடித்தார். இந்நிலையில் ரிச்சர்ட் ரிஷி தனது சோஷியல் மீடியா பக்கங்களில் நடிகை யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருப்பதை போன்ற புகைப்படங்களை பகிர்ந்தார். இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவியதை தொடர்ந்து ரிச்சர்ட், யாஷிகா இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவ துவங்கியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்கமளித்துள்ளார். அதன்படி, ‘சில நொடிகளில்’ படத்தில் நானும் யாஷிகாவும் இணைந்து நடிக்கிறோம். இந்தப்படங்களின் புகைப்படங்களை தான் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தேன். இந்தப்படத்தினை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். கதைப்படி நானும், யாஷிகாவும் சுற்றுலா செல்வது செல்வோம். அங்கு இருவரும் செல்பி எடுப்பதை போன்ற காட்சிகளை படமாக்கினோம். அந்த போட்டோக்களை தான் படத்தின் புரமோஷனுக்காக சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தேன். மற்றபடி, எனக்கும் யாஷிகாவுக்கு எல்லாரும் நினைப்பதை போல் காதலும் கிடையாது. கல்யாணமும் கிடையாது. எங்கள் புகைப்படங்களை பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக எடுத்து கொண்டனர். வெளியூரில் இருந்ததால் இதுக்குறித்து உடனே எதுவும் பேச முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதன்மூலம் யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷி காதல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.