எனக்கு ஒருத்தர் தொடர்ந்து காதல் கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார்: கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் வித்யாசமான தன் ரசிகரை பற்றி பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்யின் பைரவா, சர்க்கார் விக்ரமின் சாமி 2, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார். இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இந்நிலையில் தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக கலந்து வருகின்றார். அந்த வகையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரின் வீட்டிற்கு பெண் பார்க்க வந்த ஒருவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் கூறியதாவது:-

சில நேரங்களில் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் வரும். அதிலிருந்து மீண்டு வரவும் முடிந்தது. மகாநடி படத்திற்கு பிறகு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல பெயரும் கிடைத்தது. அதன்பிறகு 6 மாதங்களாக எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இப்போ வந்துடும் அப்போ வந்துடும் என்று நினைத்தேன். ஆனாலும் வரவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு என்ன செய்யலாம் என யோசித்தேன். கமர்ஷியலை விரும்பினேன்: எனக்கு கமர்ஷியல் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு கதாநாயகியை மையப்படுத்திய கதைகளாக வந்தது. கமர்ஷியல் படங்கள் பண்ண வேண்டும் என்பதற்காக 3,4 மாதங்களுக்கு கதாநாயகி ஓரியண்டட் கதைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பார்த்தால் எனக்கு பொருளாதார ரீதியாகவும் தேவை இருக்கு. அதனால் அது போன்ற கதாநாயகி மையப்படுத்தி வரும் படங்களையும் நடிக்க தொடங்கினேன்.

எனக்கு ஒருத்தர் தொடர்ந்து காதல் கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார். என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அதில் எழுதியிருந்தார். அதில் அவரின் பெயர், முகவரி எல்லாமே இருக்கும். பதிலுக்கு அவரும் என்னிடம் இருந்து ரிப்ளை எதிர்பார்ப்பார். ஆனால் நான் பதில் கடிதம் எதுவும் அனுப்பவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒருவர் என் வீடு தேடியே வந்துவிட்டார். அவர் பார்க்க வேற மாதிரி இருந்திருக்கிறார். அப்போ நான் சென்னை வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்பவர்களிடம் அவ எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றானு கேட்டாராம். இதையெல்லாம் கேட்டப்போ, டேய் யார்ரா நீனு தோணுச்சு. அப்புறம் உதயநிதி கிட்டயே இதை சொன்னேன். அதே ஆள் கேரளாவில் இருக்கிற என் அம்மா வீட்டுக்கெல்லாம் சென்று அவங்களிடம் எல்லாம் பேச முயற்சித்திருந்தார். கடைசியில் அவர் என்னை பெண்கேட்டு வந்துள்ளாராம். இதனை என் அம்மா என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.