சிங்கத்தை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்தார்.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்து குறிப்பில் கூறுகையில், ‘‘நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு பூங்கா நிர்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்பட்டது. மேலும், இது ஷேரு சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.