ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது!

ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் ஒரு காட்சியிலும் கூட தமன்னா இல்லை. ‘ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது. வீச்சு தான்’ என்ற வசனத்துக்குப்பிறகு சில ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் வந்து செல்கின்றன. அனிருத் தன் பங்கிற்கு மாஸ் பிஜிஎம்மை அள்ளி தெளித்திருக்கிறார்.