பிரேக் அப் கஷ்டமாத்தான் இருக்கும்: லாஸ்லியா

நான் இப்போது செய்திருக்கும் இந்த பிரேக் அப் பாடலுக்கும், கவின் திருமணம் செய்ததிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

கவின் திருமணம் செய்தது குறித்து லாஸ்லியா பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பிரேக் அப் ஆனால் சாதரண மனிதனுக்கு எப்படி வலிக்குமோ, அதே போலதான் எனக்கும். அந்த சமயத்தில் நாம் ஒரு விதமான மனநிலையை கடப்போம். இங்கு யாருமே, யாருக்கும் அட்வைஸ் செய்ய முடியாது. காரணம், நான் பார்த்த விஷயத்தை அவர்கள், அவர்களது வாழ்க்கையில் பார்த்து இருக்க மாட்டார்கள். அவர்கள் வேறு வகையான விஷயத்தை பார்த்து இருப்பார்கள். நான் என்னுடைய வலிதான் மிகப்பெரியது என்று நினைத்து இருப்பேன். ஆனால், இன்னொருவர் கதையை கேட்கும் போதுதான் தெரியும், அது அதை விட பெரியது என்று. எனக்கு இது போன்று பிரேக் அப் நடந்தால், அப்படியே அதில் உட்கார்ந்து விட முடியாது. அடுத்ததை பார்த்து சென்றுதான் ஆகவேண்டும். கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் நாம் கடந்து சென்றுதான் ஆக வேண்டும். நமக்காக யாரும் இங்கு காத்திருக்க மாட்டார்கள். இங்கு இருக்கும் நேரமும் யாருக்கும் காத்திருக்காது. ஆகையால் அடுத்ததை பார்த்து சென்று கொண்டிருக்க வேண்டியதுதான்.

நான் இப்போது செய்திருக்கும் இந்த பிரேக் அப் பாடலுக்கும், கவின் திருமணம் செய்ததிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரது திருமணத்தை பார்த்து எனக்கு எதுவும் தோன்றவில்லை. அவர் அவரது வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, சூப்பராக சென்று கொண்டிருக்கிறார். அதில் நான் என்ன கமெண்ட் சொல்ல முடியும். அவருடைய பர்சனல் வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் மிகவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை பார்க்கும் போது உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதில் கவலைப்படுவதற்கென்று எதுவும் இல்லை. மூன்றாவது நபர் இருவரையும் கனெக்ட் செய்து பேசினால் அதனை நாம் எதுவுமே செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.