நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை: ராஷ்மிகா மந்தனா

‘அனிமல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ராஷ்மிகா மந்தனா, நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என கூறினார்.

ரன்பீர் கபூர்- ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘அனிமல்’ படம் அடுத்த மாதம் 1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனையொட்டி நேற்று சென்னையில் இப்படத்தை விளம்பரப்படுத்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியதாவது:-

பெரிய நடிகர்களின் படங்களில் நான் இருப்பதற்கு எந்தவித ரகசியமும் இல்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதையை கேட்பேன். இயக்குநரை நம்புவேன், அதற்குமேல் என் கையில் எதுவுமில்லை. நான் நடிகை ஆவேன் என்று கூட நினைக்கவில்லை. எனக்கு இதுபோன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிப்பது பெருமையான விஷயம். தற்போது மிகப்பெரிய நபர்களுடன் மேடையில் அமர்ந்துள்ளேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளுக்கும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.