‘தங்கலான்’ டப்பிங்கை நிறைவு செய்தார் மாளவிகா மோகனன்!

‘தங்கலான்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் டப்பிங் பணிகளை மாளவிகா மோகனன் நிறைவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

தங்கலான் படத்தில் சியான் விக்ரமின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இதேபோல படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனின் கெட்டப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. படத்தில் இவர்களுடன் பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து தனிக்கவனத்துடன் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தான் நிறைவு செய்துள்ளதாக மாளவிகா மோகனன் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது ஆக்ஷன் காட்சிகளில் தான் நடித்துள்ள காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷனுடன் இந்தக் காட்சிகளுக்கு அவர் டப்பிங் செய்வது பார்ப்பவர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.