சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்துக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். இந்தக் காலக்கட்டத்தில் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பேன். பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியை புறந்தள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.