ஸ்பெயின் பயணிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இந்தியர்கள் வெட்கப்படவேண்டும்: சின்மயி

ஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இந்தியர்கள் வெட்கப்படவேண்டும் என்று சின்மயி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாடகி சின்மயி, வேதனையுடன் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்போது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டால் இந்தியர்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும்” என சின்மயி தெரிவித்துள்ளார்.