புஷ்பா 2-ல் குத்தாட்டம் போடப் போவது ஜான்வி கபூர்?

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை கேட்டிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்கள். முதல் பாகத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த பாடலுக்கு டான்ஸ் ஆட சமந்தாவுக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்பட்டதாக அப்பொழுது பேசப்பட்டது. இதையடுத்து இரண்டாம் பாகத்திலும் சமந்தா தான் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமந்தா இல்லை மாறாக ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூரிடம் தான் கேட்டிருக்கிறார் இயக்குநர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு டான்ஸ் ஆடுமாறு பாலிவுட் நடிகை திஷா பதானியிடம் தான் முதலில் கேட்டிருக்கிறார்கள். அவர் ஆட மறுத்த பிறகே சமந்தாவை அணுகினார்கள். குத்தாட்டமா, நானா என சமந்தா தயங்கியிருக்கிறார். உங்களால் முடியும் சமந்தா என அவரை ஊக்குவித்து டான்ஸ் ஆட வைத்தவர் அல்லு அர்ஜுன் தான். ஊ சொல்றியா பாடல் ஹிட்டானதை பார்த்த திஷா பதானியோ, இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டோமே என வருத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து புஷ்பா 2 படத்தில் திஷா பதானி தான் குத்தாட்டம் போடப் போகிறார் என முதலில் பேச்சு கிளம்பியது.

அதன் பிறகு திஷா பதானி இல்லை தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா தான் டான்ஸ் ஆடப் போகிறார். ஒரு பாடலுக்கு ஆட ரூ. 2 கோடி கேட்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஸ்ரீலீலா பயங்கரமாக டான்ஸ் ஆடுவார். அதனால் அவருக்கு ரூ. 2 கோடி கொடுப்பதில் தவறு இல்லை என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஸ்ரீலீலா இல்லை ஜான்வி கபூர் தான் புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடப் போகிறார் என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த தகவலையும் நம்ப முடியாது. முன்னதாக ஊ சொல்றியா பாடலுக்கு டான்ஸ் ஆடி புஷ்பா படத்தின் ஹீரோயினான ரஷ்மிகா மந்தனாவையே ஓவர்டேக் செய்தார் சமந்தா. அதே போன்று இரண்டாம் பாகத்தில் ஆடும் நடிகையும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.