அஜித்துக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்: கீர்த்தி சுரேஷ்!

“அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம். ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன்” என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்த சூழலில்; அஜித் பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், “அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம். ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன். அண்ணாத்த படத்தின் ஷூட்டின்போது நான் தங்கியிருந்த ஹோட்டலில்தான் அவரை பார்த்தேன். எனது ரூமை க்ராஸ் செய்து சென்றார். நான் அதை கவனித்து உடனே ஓடிப்போய் பேசினேன். நான் அப்படி செய்வதற்கு முன்னரே அவரது உதவியாளரிடம் அவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனது அம்மாவுடன் ஷாலினி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்””என்றார்.