ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்: நடிகை திரிப்தி டிம்ரி!

ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள் என்று நடிகை திரிப்தி டிம்ரி கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகையான திரிப்தி டிம்ரி ‘அனிமல்’ படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். அனிமல் படம் ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என்றும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ‘அனிமல், பேட் நியூஸ்’ போன்ற படங்களில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்துள்ள உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.

இதனால் காட்டமான திரிப்தி டிம்ரி ரசிகருக்கு பதில் அளித்து கூறும்போது, ”நான் இதுமாதிரி நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
ஆபாச காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள். ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்” என்றார்.