இந்தியாவின் நிலைமை சரியில்லை: மம்தா பானர்ஜி

இந்தியாவின் நிலைமை சரியில்லை என்றும், எனினும் பயப்படாமல் போராட வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ரெட் ரோடு பகுதியில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:

நாட்டில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்ல நாள் விரைவில் வரும். மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களிடையே மிக உயர்ந்த ஒற்றுமை உள்ளது. நாட்டில் பிரித்தாளும் கொள்கையை மையப்படுத்தி தனிமைப்படுத்தும் நோக்கிலான அரசியல் நடக்கிறது. இது நாட்டுக்கு நல்லது இல்லை. நானோ எனது கட்சியோ, இந்த அரசோ உங்களை வருத்தப்படுத்தும் எந்த செயலையும் செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.