திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:

கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் அதிமுக பந்தல் அமைத்து வருகிறது. வேறு எந்த கட்சியும் தண்ணீர் பந்தல் திறக்கவில்லை. அரசை பொருத்தவரையில் மக்கள் எப்படி போனாலும் பிரச்சனை இல்லை என்று இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. காலம் காலமாக இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக, விளம்பரத்திற்கான அரசாக, ஸ்டன்ட் அரசாக உள்ளது.

காவல்துறை தப்பிற்கு காவல்துறை விசாரணையா? திமுக ஆட்சியில் தான் 5 பேர் லாக்கேப் பில் மரணம் ஆகி உள்ளனர் அதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டும். சட்டசபை துதிபாடும், ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை. மத விவகாரத்தில் அரசு மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெட்ரோல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு திமுக தோழமை கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை?, திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறுவார்கள். திமுகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடையாது. பாதியில் செல்பவர்களுக்கு பதவி கொடுத்தால் ஏற்கனவே இருக்கும் மூத்தவர்கள் என்ன செய்வார்கள்.

திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் ஆல் அட்ரஸ் இல்லாமல் பொய் இருக்கும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி அடையும் தேர்தலுக்காக நிறைய வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து விட்டு தற்போது அதனை நிறைவேற்றாமல் நிதி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் தெரிவிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.