ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா?: சீமான்!

ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை ராஜீவ் காந்தி செய்துள்ளார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்க கற்றுத் தந்தவர் தந்தை ராஜீவ் காந்தி. நாங்கள் ஒன்றாக கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் வைத்திருக்கிறேன் என்ற ராகுல் காந்தியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், “ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார்; ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் அவர்” என ஆவேசமாகப் பேசினார்.