புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோயில் வாளாகம் முன் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மாவட்ட எஸ்.பி., கன்வார் விஷால் சிங் கூறுகையில், கொலை குறித்து நடத்திய விசாரணையில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர் ஜெகன்னாதர் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்தது. , முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.