மரியுபோல் நகரில் இருந்து 100 உடல்கள் மீட்பு!

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 100 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன.

இந்நிலையில், மரியுபோல் நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆண்டிரியுசெங்கோ கூறும்போது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 வானளாவிய கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. அவற்றில் 2 கட்டிடங்களில் நடந்த தேடுதல் பணியில் 50 முதல் 100 உடல்கள் வரை மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தாக்குதலில் மரணங்கள் அதிகரித்து வருகின்றன என கூறியுள்ளார்.

இதேபோன்று, லுகான்ஸ்க் நகர கவர்னர் கூறும்போது, சிவிரோடொனெட்ஸ்க் பகுதியை ரஷ்ய படைகள் பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன என கூறியுள்ளார். தொன்பாஸ் நகரின் விதியானது முடிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.