விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா மருந்து!

மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்து விட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா கூறியதாவது:-

மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கான மருத்துவப் பரிசோதனைகளை முடித்துள்ளோம். அதன் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தரவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம். அனைத்தும் சரியாக நடந்தால், அதை அறிமுகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கும். உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட மூக்கின்வழி செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.