ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமனம்!

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐநா.வுக்கான இந்திய தூதராக பணியாற்றி சையத் அக்பருதீன் ஓய்வு பெற்ற பிறகு, ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதராக டிஎஸ்.திருமூர்த்தி கடந்த 2020 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது ஓய்வு பெறுவதால், 1987ம் ஆண்டில் ஐஎப்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ருச்சிரா காம்போஜ் ஐநா.வுக்கான நிரந்தர தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது பூடான் நாட்டில் இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். ஐநா.வுக்கான நிரந்தர தூதர் பணியை ருச்சிரா காம்போஜ் விரைவில் தொடங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.