ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடித்து ராணுவ அதிகாரிகள் இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய ராணுவ வீரர்கள் மெந்தர் செக்டார் பகுதியில் பணியில் இருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் கேப்டன் ஆனந்த் மற்றும் கேஜிஓ நைப் சுபேதார் பகவான் சிங் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பிகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கேப்டன் ஆனந்த், உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள போகர் பிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நைப் சுபேதார் பகவான் சிங்.