அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும்: பிரதமர் மோடி

அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும். சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

குஜராத்தில் பா.ஜ., மேயர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று (செப்.,20) காலை துவங்கியது. இந்த மாநாட்டில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் துவங்கி வைத்த பிரதமர் மோடி மேயர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:-

சர்தார் வல்லபாய் படேல் மேயராகதான் தனது பயணத்தை துவங்கினார். சிறந்த இந்தியாவிற்கான அவரது பாதையை நாம் பின்பற்றி, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களும் இப்போது பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகின்றன. அந்த பகுதிகளில் தொழில் கட்டமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு, குறு விற்பனையாளர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெறுவதை மேயர்கள் உறுதி செய்ய வேண்டும். அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும். சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் வளர்ச்சி நன்கு திட்டமிடப்பட வேண்டும். 2014ம் ஆண்டின் 250 கிலோ மீட்டருக்கு குறைவாக மெட்ரோ ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது 775 கிலோ மீட்டருக்கு அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.