இலங்கை கடற்படை அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துள்ளது. ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கைது செய்து செய்து இலங்கை இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. மத்திய – மாநில அரசுகள் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வகையிலே இவற்றிற்கு உரிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தொடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கு மிகவும் கண்டிக்கதக்கது. மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து, இனி மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.