ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முஞ்ச் மார்க் பகுதியில் லஷ்கர் இ தொய்யா அமைப்பை சேர்ந்த 3 பேரை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சோபியான் மாவட்டம் முன்ஜா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.முஞ்ச் மார்க் பகுதியில் லஷ்கர் இ தொய்யா அமைப்பை சேர்ந்த 3 பேரை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.