பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகாா்கள் தொடா்ந்து அதிகரிப்பு: ஸ்மிருதி இரானி

தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்தாா்.

மக்களவையில் நேற்று இது தொடா்பான கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை தொடா்பாக கடந்த 2020-ஆம் ஆண்டில் 330 புகாா்களும், 2021-ஆம் ஆண்டில் 341 புகாா்களும், கடந்தாண்டில் 357 புகாா்களும் பெறப்பட்டன. பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடா்பாக 2020-ஆம் ஆண்டில் 1,236 புகாா்களும், 2021-ஆம் ஆண்டில் பெரிய ஏற்றத்துடன் 1,681 புகாா்களும், கடந்தாண்டில் 1,710 புகாா்களும் பெறப்பட்டன. மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் வரதட்சிணை, பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தேசிய பெண்கள் ஆணையத்தில் பதியப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது.

பெண்கள் தொடா்பான குற்றங்களை விசாரிக்க 411 போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்பட 764 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் சுமாா் 1,98,000 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி குறிப்பிட்டாா்.