கோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இதனைக் கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்தகால வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது என்ற கேள்வியையும் முன் வைத்தார். தற்போது கோடைக்காலம் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் டூர் போயிருக்கிறார் என்றும் அதில் தவறேதும் இல்லை எனவும் பிரேமலதா கிண்டல் அடித்தார்.