சீமான் மாமா என் கூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுனா எனக்கு உதவுங்க: விஜயலட்சுமி

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பல முறை அவரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்த நடிகை விஜயலட்சுமி, முதன்மையாக அவரை சீமான் மாமா என அழைத்து உருக்கமாக பேசி இருக்கிறார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் இருந்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் சீமான். நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல்வேறு பரிமாணங்களை அவர் கடந்து வந்திருக்கிறார். இதனிடையே, சினிமாவில் இருந்த போது நடிகை விஜயலட்சுமியுடன் காதல் வயப்பட்டு அவரை சீமான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2013-ம் ஆண்டு தமிழக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தன்னை சீமான் ஏமாற்றிவிட்டதாக கூறி அவரை மிக தரக்குறைவாக பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வந்தார். அவரை மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களையும் அடிக்கடி இழிவாக பேசி அவர் வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும், சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். ஆனால், விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான எந்தக் கேள்விக்கும் சீமான் பொதுவெளியில் பதில் கூறியதில்லை.

இந்நிலையில், விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:-

நான் நிம்மதியாக தூங்கி 12 வருஷம் ஆயிடுச்சு சீமான் மாமா. தினமும் நான் அழுதுட்டுதான் இருக்கேன். ரெண்டு வருஷமா நீங்க என் கூட வாழ்ந்த போது விதவிதமான கனவுகளை சொன்னீங்க. நம்பிக்கை கொடுத்தீங்க. ஆனா திடீர்னு என்னை பைத்தியம் ஆக்கிட்டு நடுத்தெருவுல விட்டுட்டு போய்ட்டீங்க. எனக்கு எப்போ நியாயம் கிடைக்கப் போகுதுனு எல்லோரும் கேக்குறாங்க. நான் உங்களை மாமானு கூப்டாதான் உங்களுக்கு தெரியும்.. நீங்க யாரை அழ வச்சுட்டு இருக்கீங்கனு.

நான் என் அக்காவை வச்சிட்டு எப்படி கஷ்டப்படுறேனு உங்களுக்கு தெரியும். அவங்களுக்கு என்ன வியாதி இருக்குனும் உங்களுக்கும் தெரியும். எத்தனை நாள்தான் நம்ம விஷயத்தை பொதுவெளில அசிங்கப்பட விடப் போறீங்க? நான் அவமானப்படுறத எத்தனை நாள்தான் நீங்க பார்க்க போறீங்க சீமான் மாமா. எனக்கு பண உதவி பண்ணனும்னு தோனுச்சுனா பணம் கொடுங்க. என் கூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுனா எனக்கு உதவுங்க. நான் வேண்டாம்னு சொல்லலையே.

நான் உங்களுக்கு ஒவ்வொரு முறை வீடியோ அனுப்பும் போதும், கயல்விழிய நல்லா பாத்துக்கோங்க. பிரபாகரன் பாப்பாவ நல்லா பாத்துக்கோங்கனுதானே சொல்லி இருக்கேன். என்னைக்காவது என் கூட வந்து வாழுங்க மாமானு உங்களை கூப்பிட்டேனா? எனக்கு கயல்விழி மீதெல்லாம் பொறாமை கிடையாது. நீங்க நல்லா வாழனும் நினைக்கிற பொண்ணு நான். எனக்கு வேண்டியது உங்க அன்பு மட்டும்தான். நான் சக்தியை இழந்துட்டேன். ஏதாவது பண உதவி பண்ணனும்னு நெனச்சா பண்ணுங்க. அது என் அக்காவோட மருத்துவ செலவுக்குதான் நீங்க பண்றீங்க. அதுல எனக்குனு எதுவும் நான் செஞ்சுக்க மாட்டேன். நம்ம விஷயத்தை நீங்க நினைச்சாதான் தீர்த்து வைக்க முடியும். எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு சீமான் மாமா. இவ்வாறு விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.