நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம். கோடநாடு சம்பவத்தில் நடந்த உண்மைகள் பற்றி தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தெரியும். கோடநாடு வழக்கில் தமிழ்நாடு மக்களின் எண்ணப்படியே முடிவு வரும். மதுரையில் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாநாடு முடிந்துபோன புளியோதரை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.