காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவினை இரு மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

“காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மேலாண்மை ஆணையம் உள்ளது. இரு மாநில அரசுகளும் மேலாண்மை ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது:-

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், எனவே நான் தமிழ்நாட்டின் தேவைக்காக அழுத்தம் கொடுக்க முடியும். அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்மாநிலத்தின் தேவைக்காக அழுத்தம் கொடுப்பார்கள். இந்த விவாகரத்தில் (காவிரி நீர் பங்கீடு) முடிவெடுக்க ஆணையம் உள்ளது. இரண்டு மாநில அரசுகளும் ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.