சீமானை பற்றி தப்பா பேசுனீங்கனா நான் உங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசுவேன்: விஜயலட்சுமி

“சீமானை பற்றி தப்பா பேசுனீங்கனா நான் உங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசுவேன்” என்று வீரலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரை ஒன்று சேர்ந்து அடிப்பதற்காக ஒன்று சேர்ந்த நடிகை விஜயலட்சுமியும், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமியும் தற்போது மோதி வருகின்றனர். இரண்டு பேரும் மாறி மாறி வீடியோ போட்டு திட்டிக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று மதியம் வீரலட்சுமி வெளியிட்ட வீடியோவில், “என்ன விஜயலட்சுமி.. என் புருஷன் காலில் வந்து விழுந்ததெல்லாம் மறந்து போயிருச்சா? சீமானை எதிர்ப்பதற்காக உங்களுக்கு அவ்வளவு உதவிகளை செஞ்சப்பவும் நன்றி மறந்துட்டு பேசுறீங்க. உங்களுக்கு இது லாஸ்ட் வார்னிங். இனி என்னை பத்தி பேசுனா, நான் பல விஷயங்களை பத்தி வாய தொறக்க வேண்டி வரும்” என எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று மாலை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்ன வீரலட்சுமியம்மா.. மிரட்டுறீங்களா.. லாஸ்ட் வார்னிங், ஃபர்ஸ்ட் வார்னிங்குனு வீடியோ போட்டுருக்கீங்க. அய்யோ.. இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆளு விஜயலட்சுமி கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமேம்மா. உங்களுக்கு தெரியாம போயிருச்சே. வீரலட்சுமி.. உங்கள்ட்ட நான் பல தடவை சொல்லிட்டே இருக்கேன். நீங்க தான் என்னை வம்புக்கு இழுத்துட்டு இருக்கீங்க. நான் உங்களை வம்புக்கு இழுக்கல. எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுருக்குனு நீங்க சொன்னா கம்முனு இருக்கணுமா? அதுக்கு நான் உங்களுக்கு அடிமை கிடையாது. புரிஞ்சுச்சா?

உங்கள பத்தியும், உங்க குடும்பத்த பத்தியும் பேசக்கூடாதுனு நினைச்சீங்கனா, நீங்க என்னை பத்தியம், சீமானை பத்தியும் தப்பா பேசக்கூடாது. சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் கொச்சைப்படுத்தினீங்கனா, நானும் உங்களை பத்தி பேசிட்டு போய்கிட்டே இருப்பேன். என்னமோ போலீஸ் உங்க கையில இருக்குதாம். நீதிமன்றம் உங்க கையில இருக்குதாம். அய்யோ பயமாக இருக்கே.

வீரலட்சுமி.. நீங்க உண்மையான தமிழச்சியா இருந்திருந்தா, உங்களை பத்தியும், என்னை பத்தியும் நாம் தமிழர் கட்சி ஒரு அசிங்கமான வார்த்தைய சொன்னப்பவே, அவங்க மேல நீங்க போலீஸ்ல புகார் கொடுத்துருக்கணும். நாக்கை புடுங்கிட்டு சாகுற மாதிரி கேட்டாங்கல்ல. அப்போ என்ன பண்ணிட்டு இருந்தீங்க? அப்பவே சீமான் மேல புகார் கொடுத்திருந்தீங்கனா, நீங்க சரியான ஆளு. அதை விட்டுட்டு பாக்சிங்குக்கு வர்றியா, கராத்தேக்கு வர்றியானு காமெடி பண்ணிட்டு சுத்திகிட்டு இருக்கீங்க.

என்கிட்ட ஏம்மா மோதிட்டு இருக்கீங்க. போய் மோதுங்க. சீமான் கிட்டபோய் மோதுங்க. நாம் தமிழர் கட்சி மேல் போய் மோதுங்க. அப்படி நீங்க மோதுனீங்கனா, சீமானுக்கு ரொம்ப பிடிக்கும். நாம் தமிழர் கட்சிக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்களும் சூப்பரா உங்க கிட்ட மோதுவாங்க. நாம ரெண்டு பேரும் மோதி உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? நீங்க வாய மூடுனா நானும் வாய மூடுவேன். இந்த பயமுறுத்துறது எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க.. புரியுதா?. இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.