4 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க ஸ்டாலின்!

தெலுங்கனா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தெலுங்கான தவிர்த்து பிற மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் ஹேப்பி மோடில் உள்ளனர்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற மாநிலங்களில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு பாடுபட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.