சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முதல்வர் முக ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் தமிழக அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த பாட்டோம் எனக்கூறிய முதல்வர் முக ஸ்டாலினை, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், “Stupid.. குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது” என்று பதிவிட்டுள்ளார். அதோடு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஸ்டாலின் கூறியதாக வெளியான செய்தியையும் தனது எக்ஸ் தளத்தில் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.