வங்காளதேசத்திலிருந்து ஊடுருவலை அனுமதிக்கப்பட்டோம்: அமித் ஷா!

மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்காளதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கும் அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப்படை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக் இணையதளத்தில், “உள்துறை மந்திரி அமித் ஷா உடன் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருகின்றன. இதன் காரணமாக வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள திரிபுரா, மேற்கு வங்காளம், மேகாலயா, அசாம் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. திரிபுரா 856 கிலோ மீட்டர் எல்லையை வங்காளதேச நாட்டு எல்லையுடன் பகிர்ந்துள்ளன.