காவல் இணை ஆணையர் மீது பொய் புகார் அளித்ததாக பெண் போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு!

பாலியல் குற்​றச்​சாட்​டால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்ட இணை ஆணையர் மீது சம்பந்​தப்​பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்​துள்ளதாக அவரது மனைவி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவல​கத்​தில் புகாரும் அளித்​துள்ளார்.

சென்னை போக்கு​வரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்கு​மார், தனக்கு பாலியல் தொந்​தரவு அளிப்​பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி​யிடம் புகார் அளித்​திருந்​தார். இதன்​பேரில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில் மகேஷ்கு​மாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்கு​மார் உத்தர​விட்​டார். மேலும் அவருக்கு உடந்​தையாக இருந்​ததாக மாதவரம் போக்கு​வரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்​திருப்​போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.

இந்நிலை​யில், தன் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்த பெண் போலீஸ் மீது, மகேஷ்கு​மாரின் மனைவி​யும் முன்​னாள் எஸ்ஐ​யுமான அனுராதா குற்றம் சாட்டினார். செய்தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது:-

எனது கணவர் மீது அந்த பெண் போலீஸ் பாலியல் பலாத்​காரம், துன்​புறுத்தல் என்றெல்​லாம் புகார் சொல்லி இருக்​கிறார். அந்த மாதிரி எதுவும் இல்லை. அவர்கள் 2 பேருக்​கும் ஏற்கெனவே ஒரு உறவு இருந்தது. இந்த விவகாரத்​தில் அந்த பெண்​ணை​யும் என் கணவரை​யும் கண்டித்து இருக்கிறேன். ஆனால் அந்த பெண் போலீஸ் பழிவாங்​கும் செயலாக எங்கள் குடும்பத்தை பிரிக்க பார்க்​கிறார்.

எனது கணவரிடம் அந்த பெண் போலீஸ் அவ்வப்​போது பணம் கேட்​பார். இவரும் கொடுத்து வந்தார். அந்த பெண் மறைமலைநகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். திடீரென்று எனது கணவரிடம் வீட்​டின் கட்டுமான பணிக்கு ரூ.25 லட்சம் கேட்​டார். அவ்வளவு பெரிய தொகை இல்லை என எனது கணவர் சொன்ன​தால், அந்த பெண் எனது கணவரை மிரட்ட தொடங்​கினார். தற்போது பொய் புகார் கொடுத்​துள்ளார். கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக அவர்கள் 2 பேரும் தெரிந்​தே​தான் பழகினார்​கள். அப்புறம் எப்படி பாலியல் பலாத்​காரம், துன்​புறுத்தல் என்று சொல்ல முடி​யும். இந்த விவகாரத்​தில் சரியான முறை​யில் விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். அவசரப்​பட்டு எனது கணவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடாது. எனவே தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்​டாம். இவ்வாறு கூறினார்.

மேலும், அந்த பெண் போலீஸும் மகேஷ்கு​மாரும் ஓட்டலுக்கு சென்​றிருந்த சிசிடிவி காட்​சிகளை​யும் அனுராதா வெளி​யிட்​டார். பின்னர் டிஜிபி அலுவல​கத்​தில் நேற்று புகார் அளித்​தார். அ​தில் தனது கணவருடன் தகாத உற​வில் ஈடு​பட்டு ரூ.25 லட்​சம் கேட்டு மிரட்டி பொய்யான பாலியல் துன்​புறுத்​தல் பு​கார் அளித்​துள்ள பெண் ​போலீஸ் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​று கூறி​யுள்​ளார்​.