போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து: தலைமைச் செயலர்!

போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.

கல்வி நிறு​வனங்​களில் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்​கொள்வது தொடர்பாக சென்னை தலைமைச் செயல​கத்​தில் நேற்று உயர்​நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது. தலைமைச் செயலர் நா.முரு​கானந்தம் தலைமை வகித்​தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​களுக்கு பல்வேறு அறிவுறுத்​தல்கள் வழங்​கப்​பட்டன. அதன் விவரம்:

கல்வி நிறு​வனங்​களில் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் குற்​றங்​களில் ஈடுபடு​வோர் மீது துறைரீ​தியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும். போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​கள், பணியாளர்​களின் பள்ளி, உயர்​கல்வி சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும். பணியாளர்கள் அனைவரும் ‘குழந்தை பாது​காப்பு உறுதி​மொழி’ ஆவணத்​தில் கையெழுத்​திடுவது கட்டாய​மாகும்.

அனைத்து பள்ளி மாணவ, மாணவி​களுக்கு ‘சுய பாது​காப்பு கல்வி’ அளிக்​கப்பட வேண்​டும். ஆசிரியர் பட்டய மற்றும் பட்டப்​படிப்பு பாடத்​திட்​டங்​களில் குழந்தை​களுக்கு நடக்​கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடம் சேர்க்​கப்​படும். போக்சோ வழக்​குகள் தொடர்பான அனைத்து விவரங்களை தொகுக்​க​வும், கண்காணிக்​க​வும் தொடர்பு அலுவலர் நியமிக்​கப்பட வேண்​டும். மாணவிகள் பயணம் செய்​யும் பள்ளி வாகனங்​களில் பெண் உதவி​யாளர்கள் பணியமர்த்​தப்பட வேண்​டும்.

இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளி​களில் உடற்​கல்வி பணியிடங்​களில் ஆசிரியைகளை நியமனம் செய்​ய​வேண்​டும். விளை​யாட்டு போட்​டிகள், கலை நிகழ்ச்​சிகள், கல்வி சுற்றுலா போன்ற​வற்றுக்கு மாணவிகளை ஆசிரியைகளே அழைத்​துச் செல்ல வேண்​டும். கல்வி நிறு​வனங்​களுக்கு வெளியே முகாம்​களில் தங்கும்பட்சத்​தில் மாணவி​களுடன் ஆசிரியைகள் மட்டுமே தங்குவதை உறுதி செய்​ய​வேண்​டும்.

மாணவியர் விடு​திக்​குள் வெளிநபர்கள் அனும​திக்​கப்பட கூடாது.விடுதி பராமரிப்பு பணி, பெண் காப்​பாளர்கள் மேற்​பார்​வை​யில் மட்டுமே மேற்​கொள்​ளப்​பட​வேண்​டும். அனைத்து கல்வி நிறு​வனங்​களி​லும் ‘1098’ மற்றும் ‘14417’ ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்பு​ணர்வு பதாகைகள் அமைக்​கப்பட வேண்​டும். அனைத்து பள்ளி​களி​லும் ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் முக்​கியமான இடங்​களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி​செய்ய வேண்​டும்.

பாலியல் குற்​றங்கள் பற்றி தெரிய​வந்​தால், சம்பந்​தப்​பட்டபள்ளி​யின் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து, மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலுவலருக்​கும் தகவல் தெரிவிக்க வேண்​டும். புகார் அளிக்​கும் மாணவி​களின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது.

இந்த அனைத்து பரிந்​துரைகளை​யும் அரசு மற்றும் தனி​யார் பள்​ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​கள் கண்​டிப்பாக பின்​பற்றுவதை சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​கள் உறு​தி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.