மீண்டும் தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று மேலும் மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது

கைது செய்யபட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.