எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு!

தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் என்று மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.வ.வேலு புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். காரில் பயணிக்கும்போதெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர் பாடலைத்தான் கேட்கிறார். தனது படம் வெளியானதும் எப்படி இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் முதலில் ஸ்டாலினிடம்தான் கேட்பார்.

ரஷ்யாவின் மொழியையும் பண்பாட்டையும் காக்க முற்பட்ட ஜோசப் ஸ்டாலினை அந்த நாட்டு மக்கள் இரும்பு மனிதர் என்று அழைத்தனர். நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க போர்க் குரல் எழுப்பக்கூடிய தமிழ்நாட்டின் இரும்பு மனிதராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.