ராஜி​னாமா அறி​விப்பை திரும்ப பெற்​றார் துரை வைகோ!

மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வருத்​தம் தெரி​வித்​ததையடுத்​து, உட்​கட்சி மோதல் முடிவுக்கு வந்​தது. தனது ராஜி​னாமா அறி​விப்​பை​யும் திரும்​பப் பெறு​வ​தாக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ அறி​வித்​துள்​ளார்.

மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ இடையே​யான பனிப்​போர் அண்​மை​யில் நடை​பெற்ற மதி​முக தொழிலா​ளரணி கூட்​டத்​தில் வெளிப்​பட்​டது. இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தும் வகை​யில் நிர்​வாகக் குழு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​கும் முன் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உட்​கட்சி விவ​காரத்தை வீடியோ எடுத்து வெளி​யிட்​டு, கட்​சிக்​குள் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யது அவர் தான். கட்​சிக்கு அவதூறாக சமூக வலை​தளத்​தில் பதி​விடக் கூடாது” என்​றார். இதேபோல், துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில், “நான் வைகோ​வின் சேனா​திபதி என்​ப​தற்கு அவர் முகம் பதித்த மோ​திரம் அணிந்​திருப்​பதே அடை​யாளம்” என கூறியிருந்​தார்.

இதற்​கிடையே, நேற்று திட்​ட​மிட்​டபடி கூட்​டம் தொடங்​கியது. பிறகு செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது:-

மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோவுக்கு இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்த சூழலில், இரு​வருமே மனம்​விட்டு பேசினர். கட்​சிக்​கும் பொதுச்​செய​லா​ளருக்கும், முதன்​மைச் செய​லா​ள​ருக்கும் பக்​கபல​மாக செயல்​படு​வேன் என மல்லை சத்யா சொன்​னார். இதை ஏற்​றுக் வில​கல் முடிவை திரும்​பப் பெறு​வ​தாக​வும் துரை வைகோ அறி​வித்​தார். இரு​வரும் கட்​டித் தழுவி கரம் குலுக்​கி, இணைந்து பணி​யாற்​று​வோம் என நிர்வாக குழுவுக்கு சமிக்​கை​யாக தெரி​வித்​தனர்.

வக்பு திருத்​தச் சட்​டத்​துக்கு எதி​ராக ஏப்​.26-ல் நடை​பெறும் ஆர்ப்​பாட்​டத்தை சென்​னை​யில் நான், மல்லை சத்யா உள்​ளிட்​டோரும், மதுரை​யில் துரை வைகோ, பூமி​நாதன் எம்​எல்ஏ, கோவை​யில் அவைத் தலை​வர் அர்​ஜுன​ராஜ், பொருளாளர் செந்​தில​திபன் ஆகியோர் தலை​மையேற்று நடத்த இருக்​கிறோம். மதி​முக பொதுக்​குழு ஜூன் மாதம் நடை​பெறும். இவ்​வாறு அவர் கூறினார்.

துரை வைகோ கூறும்​போது, “கட்​சி​யில் கருத்து வேறு​பாடு தவிர்க்க முடி​யாதது. மல்லை சத்யா வருத்​தம் தெரி​வித்​து​விட்​டார். அவரளித்த வாக்​குறுதி அடிப்​படை​யில் மீண்​டும் பொறுப்​பில் தொடர்​வேன். அவரது அரசி​யல் வாழ்​வுக்கு நானும் உறு​துணை​யாக இருப்​பேன்” என்​றார்.

இதே​போல் மல்லை சத்யா கூறும்​போது, “என்​னுடைய நடவடிக்​கைகள் துரை வைகோவை காயப்​படுத்​தி​யிருந்​தால் வருத்​தம் தெரிவிக்​கிறேன். அவர் தொடர்ந்து கட்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று சொன்​னேன்” என்​றார்.