மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

அரசுப் பள்ளி ஆசிரியை தாக்​கிய​தில் பாதிக்​கப்​பட்ட இரு மாணவி​களுக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கு, மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் பகு​தி​யில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வருபவர் சாந்​தி. இவர் பள்ளி கழிப்​பறைக்​குச் சென்​ற​போது கதவு மூடப்​ப​டா​மல் இருந்​ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவி​கள், கழிப்​பறைக் கதவை மூடி​உள்ளனர். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவி​களை ஆசிரியை சாந்தி தகாத வார்த்​தைகளால் திட்​டி​யதுடன், சக மாணவி​கள் முன்​பாக அடித்​துள்​ளார். இதில் மாணவி​களின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக மாவட்​டக் கல்வி அதி​காரி​யிடம் புகார் அளித்​தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்​காத நிலை​யில், பாதிக்​கப்​பட்ட மாண​வி​யின் தந்தை ஆறு​முகம் மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் அளித்​தார். இந்​தப் புகாரை விசா​ரித்த ஆணைய உறுப்​பினர் வி.கண்​ண​தாசன், விழுப்​புரம் மாவட்ட கல்வி அதி​காரியை, சின்​ன​சேலம் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேரில் விசா​ரணை மேற்​கொள்​ளு​மாறு உத்​தர​விட்​டார்.

கல்வி அதி​காரி அளித்த விசா​ரணை அறிக்கை​யின் அடிப்​படை​யில், மாணவி​களை ஆசிரியை சாந்தி தாக்​கியது உறு​திப்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து கண்​ண​தாசன் பிறப்​பித்த உத்​தர​வில், “பா​திக்​கப்​பட்ட மாணவி​கள் இரு​வருக்​கும் ஒரு மாதத்​துக்​குள் தலா ரூ.2 லட்​சம் வீதம் தமிழக அரசு இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். மாணவி​களை தாக்​கிய சின்ன சேலம் மகளிர் அரசு மேல்​நிலைப் பள்ளி ஆசிரியை சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​” என்​று பரிந்​துரைத்​துள்​ளார்​.