மதுரை மேயர் இந்திராணி கணவர் திமுகவில் இருந்து நீக்கம்!

மதுரை மாநக​ராட்சி மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன்​வசந்த், திமுக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக திமுக பொதுச்செய​லா​ளர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மதுரை மேயர் இந்​தி​ராணி கணவர் பொன்​வசந்த், கட்​சிக் கட்​டுப்​பாட்டை மீறி​யும், கட்​சிக்கு அவப்​பெயர் ஏற்​படுத்​தும் வகை​யிலும் செயல்​பட்டு வந்​த​தால், அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிக​மாக நீக்கி வைக்​கப்​படு​கிறார்” என்று அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து திமுக​வினர் கூறும்​போது, “பொன்​வசந்​தின் கட்​சிப் பணி​யால் ஈர்க்​கப்​பட்ட அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பரிந்துரையில் இந்​தி​ராணி மேய​ரா​னார். தற்​போது மாநக​ராட்சி நிர்​வாகத்​தில் தலை​யீடு, கட்சி செயல்​பாடு​களில் குளறு​படி என பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் காரண​மாக பொன்​வசந்த் திமுக​வில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். இதனால், அவரது மனைவி இந்​தி​ராணி, மேயர் பதவி​யில் வழக்​கம்​போல செயல்பட முடி​யாத சூழல் உள்​ளது. மேயர் பதவி குறித்து திமுக என்ன நிலைப்​பாட்டை எடுக்க உள்​ளது என்​பது சில நாட்​களில் தெரிந்​து​விடும். அது​வரை பொன்​வசந்த் கட்சி மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தில் தலை​யிடவே முடி​யாது. அவரது நீக்​கம் தி​முக​வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்​ளது’’ என்​றனர்​.

கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​டுள்ள பொன் வசந்த், முன்​னாள் சட்டப்பேரவை தலைவர் பிடிஆர்​. பழனிவேல் ராஜனின் தீவிர விசு​வாசி. அவரது மறைவுக்​குப் பிறகு, அவரது மகன் பழனிவேல் தியாக​ராஜனின் ஆதர​வாள​ராக இருந்​தார். திமுக ஆட்சி அமைந்​த​போது பழனிவேல் தியாக​ராஜன் நிதி அமைச்​ச​ராக​வும், திமுக தகவல் தொழில்​நுட்ப அணி மாநிலச் செய​லா​ள​ராக​வும் கட்​சி, ஆட்சி இரண்​டிலுமே செல்​வாக்​குடன் இருந்து வந்​தார்.

அவர் ‘கை’ காட்​டும் நபர் மதுரை மேய​ராக வரக்​கூடிய நிலை இருந்​த​தால், தனது ஆதர​வாளர் பொன்​வசந்த் மனைவி இந்​தி​ராணியை மேய​ராக்​கி​னார். அதற்கு முன்பு வரை, இந்​தி​ராணிக்கு அரசி​யல் அனுபவமே இல்​லை. மேய​ராக அவர் பொறுப்​பேற்​ற​போது, இந்​தக் கேள்​வியை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். அதற்கு பழனிவேல் தியாக​ராஜன், `ஐஏஎஸ் அதி​காரி​கள் அவருக்கு வழி​காட்​டு​வார்​கள், போகப்​போக எல்​லாம் சரி​யாகி விடும்’ என்று நம்​பிக்கை அளித்​தார்.

இந்​தி​ராணி மேய​ரான நாள் முதல் தற்​போது வரை, பெரும்​பான்மை திமுக கவுன்​சிலர்​கள், மண்​டலத் தலை​வர்​களு​டன் ஒத்​துப்​போக​வில்​லை. மேயர் இந்​தி​ராணி பெயரளவுக்கு மேய​ராக​வும், நிழல் மேய​ராக அவரது கணவர் பொன் வசந்த் செயல்​பட்டு வரு​வ​தாக​வும், மாநக​ராட்சி நிர்​வாகப் பணி​களில் தலை​யிடு​வதுடன், அதி​காரி​களுக்கு உத்​தர​விடு​வ​தாக​வும் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதனால், மாநக​ராட்சி ஆணை​யர்​களாக வந்​தவர்​கள் சிறிது​காலம்​கூட தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் சென்​றனர். அதனால், இந்​தி​ராணி மேய​ராகி 4 ஆண்​டு​கள் நெருங்​கும் நிலை​யில் 5 ஆணை​யர்​கள் மாற்​றப்​பட்​டநிலை​யில் தற்​போது 6-வது ஆணை​ய​ராக சித்ரா வந்​துள்​ளார். இந்​நிலை​யில்​தான் பொன் வசந்த் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.