தைலாபுரம் வராத நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ இல்லை: ராமதாஸ்!

‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

பாமக மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள் மற்​றும் மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் தைலாபுரத்தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், அரசி​யல் ஆலோசனைக் குழு தலை​வர் தீரன், மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், பொருளாளர் சையத் மன்​சூர் உசேன், சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ அருள் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் கூறிய​தாவது:

பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்தை 46 ஆண்​டு​களாக வழிநடத்தி வரு​கிறேன். வன்​னியர் சங்​கத்​துக்கு தலை​வ​ராக பு.​தா. அருள்​ மொழி​யும், கட்​சிக்கு நிறு​வனர் மற்​றும் தலை​வ​ராக நானும் உள்ளோம். 34 துணை அமைப்​பு​களை உரு​வாக்​கி, வழி​காட்டி வரு​கிறேன். 34 அமைப்​பு​களும் திறம்​படச் செயல்​படு​வதற்​காக நிர்​வாகி​களை ஊக்​கு​வித்​து வரு​கிறேன்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாமக பெரிய வெற்​றியைப் பெறும். தைலாபுரத்​தில் நடை​பெறும் கூட்​டத்​துக்கு வந்​துள்ள மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள், மாநிலப் பொறுப்​பாளர்​கள்​தான் தேர்​தலில் போட்​டி​யிடப் போகிறார்​கள். இவர்​களைத்​தான் நான் வேட்​பாள​ராகத் தேர்ந்​தெடுப்​பேன். இவர்​கள்​தான் எதிர்​கால சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள். கட்​சி​யில் அனைத்து அதி​கார​மும் எனக்கு உள்​ளது. அதனால்​தான், கட்​சி​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளேன்.

கூட்​டணி குறித்து தற்​போதைக்கு எது​வும் சொல்​லத் தேவை​யில்​லை. கூட்​டணி குறித்து பேசி​னால், கூட்​டணி முடி​வாகி விட்​டதா என்று கேட்​பார்​கள். இன்​னும் கூட்​டணி முடி​வாக​வில்​லை. நல்ல, வித்​தி​யா​சமான, வெற்றி பெறும் கூட்​டணி அமை​யும். தற்​போதுள்ள 5 பாமக எம்​எல்​ஏ-க்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படுமா என்ற ரகசி​யத்தை தற்போது சொல்​லக்கூடாது. மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் பெரி​யார், அண்ணா ஆகியோர் அவம​திக்​கப்​பட்​டது குறித்து கேட்​கிறீர்​கள். யாரை​யும் இழி​வுபடுத்​தக் கூடாது. இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார்.