மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா?: மல்லிகார்ஜூன கார்கே!

மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதற்கு மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
தெரிவித்து மாநிலங்களவை துணைத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சபையின் மையப்பகுதிக்கு வரும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இதை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.