தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவத்துறை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் தினசரி பாதிப்பு 12000-ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 12,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 6,186 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் ஏற்கனவே 5,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 6,186 ஆக ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டில் 1332 பேருக்கும், கோவையில் 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், திருப்பூரில் 226 பேருக்கும், வேலூரில் 243 பேருக்கும், தூத்துக்குடியில் 202 பேருக்கும், திருச்சியில் 237 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 36,855 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.