அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழக அரசே நடத்த முடிவு.

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அரசு மாவட்ட நிர்வாகமே நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு காளைகள் மட்டுமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும்.