மாஸ்கோவில் வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமிர்த பெருவிழா, ஹர்கர்திரங்கா இயக்கத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், மாஸ்கோவில் வானில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பாராசூட் உதவியுடன் குதிக்கும் வீரர் ஒருவர், தரையில் இருந்து பல ஆயிரம் கி.மீ., உயரத்தில் தேசியகொடியை சில நிமிடங்கள் பறக்க விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.