தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்: அமெரிக்கா

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்.
உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தைவானை பாதுகாப்பார்கள்.

கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா தொற்றின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்றார். தைவான் தன்னை தானே தற்காத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.