துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் சிக்கிய ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22 டன் ஹெராயின்!

மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள நவ சேனா துறைமுகத்தில், சுமார் 22 டன் ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கன்டெய்னர் பிடிபட்டிருக்கிறது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ1,725 கோடி என டெல்லி போலீஸின் ஸ்பெஷல் செல் தகவல் தெரிவித்திருக்கிறது. டெல்லி காவல்துறைக்கு கிடைத்த உளவுத்துறையின் ரகசிய தகவலின்படி கண்டெய்னரில் கடத்தப்படவிருந்த ஹெராயினை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெராயின் கடத்தலை கண்டுபிடிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவ சேனா துறைமுகத்தில் மொத்தம் உள்ள 5 முனையங்களில் 4 முனையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.