ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்: ஜிகே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்; ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக் கொள்வதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, தமாகா கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக தமாகா தலைவர் வாசனை அதிமுக தலைவர்கள் நேற்று சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக விருப்பத்தை ஏற்பதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் எனவும் ஜிகே வாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொண்டோம் எனவும் ஜிகே வாசன் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.