இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வரும் நல்லகண்ணு, கடந்த மாதம் தனது 97-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினாா். அரசியல் சாா்ந்த முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வந்த அவருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு இருமல், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவா் கடந்த 24-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் தொடா் சிகிச்சையளித்து வருகின்றனா். கிருமித் தொற்றால் அவா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தொடா் சிகிச்சையின் பயனாக நல்லகண்ணுவின் உடல் நிலை மேம்பட்டுள்ளதாகவும், தற்போது அவா் நலமடைந்து இயல்பாக இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்ட பிறகு அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து மருத்துவா்கள் முடிவெடுக்க உள்ளனா்.