சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது!

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் அயோத்தி திரைப்படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது பிரதீப் குமார் குரலில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் சாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் பாடல்களுக்கு இசைமையத்துள்ளார்.

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் குரலில் காற்றோடு பட்டம் போல… எனத் தொடங்கும் இப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.